Pitchai paathiram Lyrics
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
Movie | Naan Kadavul | Music | Ilaiyaraaja |
---|---|---|---|
Year | 2009 | Lyrics | Ilaiyaraaja |
Singers | Madhu Balakrishnan |
பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும்
எலும்போடு சதை நரம்பு உதிரமும்
அடங்கிய உடம்பு எனும் (பிச்சை)
அம்மையும் அப்பனும் தந்ததால் - இல்லை
ஆதியின் வல்வினை சூழ்ந்ததால்
இம்மையை நான் அறியாததால் - சிறு
பொம்மையின் நிலையினில்
உண்மையை உணர்ந்திடப் (பிச்சை)
அத்தனைச் செல்வமும் உன் இடத்தில் - நான்
பிச்சைக்குச் செல்வது எவ்விடத்தில்? - வெறும்
பாத்திரம் உள்ளது என் இடத்தில் - அதன்
சூத்திரமோ அது உன் இடத்தில்
ஒரு முறையா? இரு முறையா?
பல முறை பல பிறப்பு எடுக்க வைத்தாய்
புது வினையால் பழ வினையால்
கணம் கணம் தினம் எனைத் துடிக்க வைத்தாய்
பொருளுக்கு அலைந்திடும்
பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே - உன்
அருள் அருள் அருள் என்று
அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே
அருள் விழியால் நோக்குவாய்
மலர்ப்பதத்தால் தாங்குவாய் - உன்
திருக்கரம் எனை அரவணைத்து உனதருள் பெறப் (பிச்சை)
ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும்
எலும்போடு சதை நரம்பு உதிரமும்
அடங்கிய உடம்பு எனும் (பிச்சை)
அம்மையும் அப்பனும் தந்ததால் - இல்லை
ஆதியின் வல்வினை சூழ்ந்ததால்
இம்மையை நான் அறியாததால் - சிறு
பொம்மையின் நிலையினில்
உண்மையை உணர்ந்திடப் (பிச்சை)
அத்தனைச் செல்வமும் உன் இடத்தில் - நான்
பிச்சைக்குச் செல்வது எவ்விடத்தில்? - வெறும்
பாத்திரம் உள்ளது என் இடத்தில் - அதன்
சூத்திரமோ அது உன் இடத்தில்
ஒரு முறையா? இரு முறையா?
பல முறை பல பிறப்பு எடுக்க வைத்தாய்
புது வினையால் பழ வினையால்
கணம் கணம் தினம் எனைத் துடிக்க வைத்தாய்
பொருளுக்கு அலைந்திடும்
பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே - உன்
அருள் அருள் அருள் என்று
அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே
அருள் விழியால் நோக்குவாய்
மலர்ப்பதத்தால் தாங்குவாய் - உன்
திருக்கரம் எனை அரவணைத்து உனதருள் பெறப் (பிச்சை)
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.
Naan Kadavul Lyrics
Tags: Naan Kadavul Songs Lyrics
நான் கடவுள் பாடல் வரிகள்
Pitchai paathiram Songs Lyrics
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் பாடல் வரிகள்