Agalaathey Agalaathey Lyrics
அகழாதே அகழாதே
Movie | Nerkonda Paarvai | Music | Yuvan Shankar Raja |
---|---|---|---|
Year | 2019 | Lyrics | Pa. Vijay |
Singers | Prithivee, Yuvan Shankar Raja |
நடை பாதை பூவணங்கள் பார்த்து
நிகழ் காண கனவுகளில் பூத்து
ஒரு மூச்சின் ஓசையிலே
ஒன்றாய் வாழ்ந்திருப்போம்
ஓ ஓ
வா உள்ளங்கைகளை கோர்த்து
கைரேகை மொத்தமும் சேர்த்து
சில தூர பயணங்களில்
சிறகாய் சேர்ந்திருப்போம்
அகலாதே அகலாதே
நொடிகூட நகராதே
செல்லாதே செல்லாதே
கணம் தாண்டி போகாதே
நகராமல் உன்முன் நின்றே
பிடிவாதம் செய்ய வேண்டும்
அசராமல் முத்தம் தந்தே
அலங்காரம் செய்ய வேண்டும்
நடை பாதை பூவணங்கள் பார்த்து
நிகழ் காண கனவுகளில் பூத்து
ஒரு மூச்சின் ஓசையிலே
ஒன்றாய் வாழ்ந்திருப்போம்
ஓ ஓ
வா உள்ளங்கைகளை கோர்த்து
கைரேகை மொத்தமும் சேர்த்து
சில தூர பயணங்களில்
சிறகாய் சேர்ந்திருப்போம்
நீ எந்தன் வாழ்வில் மாறுதல்
என் இதயம் கேட்ட ஆறுதல்
மடி சாயும் மனைவியே
பொய் கோப புதல்வியே
நடு வாழ்வில் வந்த உறவு நீ
நெடுந்தூரம் தொடரும் நினைவு நீ
இதயத்தின் தலைவி நீ
பேரன்பின் பிறவி நீ
என் குறைகள் நூறை மறந்தவள்
எனக்காக தன்னை துறந்தவள்
மனசாலே என்னை மணந்தவள்
அன்பாலே உயிரை அளந்தவள்
உன் வருகை என் வரமாய் ஆனதே
நடை பாதை பூவணங்கள் பார்த்து
நிகழ் காண கனவுகளில் பூத்து
ஒரு மூச்சின் ஓசையிலே
ஒன்றாய் வாழ்ந்திருப்போம்
ஓ ஓ
வா உள்ளங்கைகளை கோர்த்து
கைரேகை மொத்தமும் சேர்த்து
சில தூர பயணங்களில்
சிறகாய் சேர்ந்திருப்போம்
அகலாதே அகலாதே
நொடிகூட நகராதே
நிகழ் காண கனவுகளில் பூத்து
ஒரு மூச்சின் ஓசையிலே
ஒன்றாய் வாழ்ந்திருப்போம்
ஓ ஓ
வா உள்ளங்கைகளை கோர்த்து
கைரேகை மொத்தமும் சேர்த்து
சில தூர பயணங்களில்
சிறகாய் சேர்ந்திருப்போம்
அகலாதே அகலாதே
நொடிகூட நகராதே
செல்லாதே செல்லாதே
கணம் தாண்டி போகாதே
நகராமல் உன்முன் நின்றே
பிடிவாதம் செய்ய வேண்டும்
அசராமல் முத்தம் தந்தே
அலங்காரம் செய்ய வேண்டும்
நடை பாதை பூவணங்கள் பார்த்து
நிகழ் காண கனவுகளில் பூத்து
ஒரு மூச்சின் ஓசையிலே
ஒன்றாய் வாழ்ந்திருப்போம்
ஓ ஓ
வா உள்ளங்கைகளை கோர்த்து
கைரேகை மொத்தமும் சேர்த்து
சில தூர பயணங்களில்
சிறகாய் சேர்ந்திருப்போம்
நீ எந்தன் வாழ்வில் மாறுதல்
என் இதயம் கேட்ட ஆறுதல்
மடி சாயும் மனைவியே
பொய் கோப புதல்வியே
நடு வாழ்வில் வந்த உறவு நீ
நெடுந்தூரம் தொடரும் நினைவு நீ
இதயத்தின் தலைவி நீ
பேரன்பின் பிறவி நீ
என் குறைகள் நூறை மறந்தவள்
எனக்காக தன்னை துறந்தவள்
மனசாலே என்னை மணந்தவள்
அன்பாலே உயிரை அளந்தவள்
உன் வருகை என் வரமாய் ஆனதே
நடை பாதை பூவணங்கள் பார்த்து
நிகழ் காண கனவுகளில் பூத்து
ஒரு மூச்சின் ஓசையிலே
ஒன்றாய் வாழ்ந்திருப்போம்
ஓ ஓ
வா உள்ளங்கைகளை கோர்த்து
கைரேகை மொத்தமும் சேர்த்து
சில தூர பயணங்களில்
சிறகாய் சேர்ந்திருப்போம்
அகலாதே அகலாதே
நொடிகூட நகராதே
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.
Nerkonda Paarvai Lyrics
Tags: Nerkonda Paarvai Songs Lyrics
நேர்கொண்ட பார்வை பாடல் வரிகள்
Agalaathey Agalaathey Songs Lyrics
அகழாதே அகழாதே பாடல் வரிகள்