Karpanai Kanavinile Naan Oru Lyrics
கற்பனைக் கனவிலே நானொரு
Movie | Kathanayaki (1955) | Music | G. Ramanathan |
---|---|---|---|
Year | 1955 | Lyrics | Kannadasan |
Singers | A. M. Rajah, Swarnalatha |
கற்பனைக் கனவிலே நானொரு
கதாநாயகியைக் கண்டேன் ஒரு
கதாநாயகியைக் கண்டேன்....(கற்பனை)
அந்தக் கதாநாயகி யாரோ
காதல் பாட்டு பாடினாளோ
ஹிந்தி ட்யூனில் பாடினாளோ
இங்லீஷ் டான்ஸ்ஸூ ஆடினாளோ..
சுவை தரும் தமிழில் பாடி
சினிமா ஸ்டார் போல் ஆடி
சிரிப்பு காட்டியே ஆசை மூட்டிய
இன்டர் நேஷனல் ப்யூட்டி
கறுப்பு திராட்சை போல் கண்கள்
கன்னம் இரண்டுமே ஆப்பிள்
காந்தம் போலவே கவரும் பேச்சு
கிடைத்ததே எனக்குச் சான்ஸ்ஸூ..(கற்பனை)
புள்ளி மானைப் போல் துள்ளி
பார்வையால் கதை சொல்லி
ஜாலியாய் அவள் ஜாடை பேசவே
சரசம் ஆடி வந்தீரோ
அழகு புன்னகை கண்டு
அவளிடம் ஆவல் கொண்டு
அன்னமே அஜந்தா வண்ணமே – எனவே
அடுக்கு மொழியில் அளந்தீரோ
கற்பனைக் கனவினிலே வந்த
கதாநாயகி யாரோ.....
பறக்கும் தட்டிலே வந்தாள்
பார்க்கில் என்னையே கண்டாள்
பாவை என்னுடன் கேலி பேசியே
எதிரில் வந்து நிற்கின்றாள்.
விஷயம் புரிந்து கொண்டேன்
வாழ்வினில் இன்பம் கண்டேன்
கனவிலும் நினைவிலும் இணை பிரியாத
காதல் ஜோடி நாம் தானே........(கற்பனை)
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.
Kathanayaki (1955) Lyrics
- Vetri Kodi Naatuven (கொடி நாட்டுவேன்)
- Adhirshtam Adhu (அதிர்ஷ்டம் அது)
- Ammammaa Aagaadhu (அம்மம்மா ஆகாது)
- Pasi Pasi pasi Parama (பசி பசி பரம ஏழைகளின்)
- Idli Saambaar (இட்லி சாம்பார்)
- Adho Varukiraan (அதோ வருகிறான்)
- Maalai Onru Kaiyil (மாலை ஒன்று கையில்)
- Perum Panathile Pirandhu (பெரும் பணத்திலே பிறந்து)
- Duraiye Ilamai Paaraai (துரையே இளமை பாராய்)
- Karpanai Kanavinile Naan Oru (கற்பனைக் கனவிலே நானொரு)
- Alolam Alolam (ஆலோலம் ஆலோலம்)