Song lyrics

Orae Oru Murai Lyrics

ஒரே ஒரு முறை பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
Varshan
Year
2015
Singers
Sunitha Sarathy, Vijay Prakash
Orae Oru Murai

Lyrics

Orae Oru Murai Lyrics

ஒரே ஒரு முறை பார்த்திடு
ஒரே ஒரு முறை பார்த்து பேசிடு
வேறென்ன வேண்டும் வேண்டும்

முதல் முறை உனைக் கண்ட நொடியினில்
வாழ்கிறேன்

அதே கணம் அதே தினம் தொடர்ந்திட
ஏங்கினேன்

ஒரே ஒரு முறை பார்த்திடு
ஒரே ஒரு முறை பார்த்து பேசிடு
வேறென்ன வேண்டும் வேண்டும்

முதல் முறை உனைக் கண்ட நொடியினில்
வாழ்கிறேன்

அதே கணம் அதே தினம் தொடர்ந்திட
ஏங்கினேன்

நதியில் விழுந்து
தள்ளாடும் இலைகள் ஆவோம்

நதியின் போக்கில்
அன்பே வா மிதந்து போவோம்

நீ என்னை புதிதாய் பார்ப்பதும்
நான் உன்னை மெதுவாய் ஈர்ப்பதும்

நம் கைகள் ஒன்றாய் கோர்ப்பதும்
நம் நெஞ்சம் எங்கோ மிதப்பதும்

என்றோ எங்கோ யாரோ எழுதிய
காதல் காவியம்

ஏனோ நானும் தூங்கும் போதும்
உந்தன் ஞாபகம்

ஒரே ஒரு முறை பார்த்திடு
ஒரே ஒரு முறை பார்த்து பேசிடு
வேறென்ன

புதிய உலகில்
கை கோர்த்து கூட்டிப் போனாய்

இதயக் கதவில்
கை ரேகை வைத்துப் போனாய்

ஓ பெண்ணே உன் நெருக்கம் பிடிக்குதே
உன் சுவாசம் என்னை எரிக்குதே

உன்னாலே கால்கள் பறக்குதே
வெண் மேகம் தலையில் இடிக்குதே

எது வரை போகும் அது வரை இந்த
பாதை நீளட்டுமே

எதிரினில் உந்தன் குரலினை கேட்கும்
போதை தொடரட்டுமே

பெண்ணே நீ இன்பம் என்பதா
பொல்லாத துன்பம் என்பதா

ஒரே ஒரு முறை பார்த்திடு
ஒரே ஒரு முறை பார்த்து பேசிடு

வேறென்ன வேண்டும் வேண்டும்
முதல் முறை உனைக் கண்ட நொடியினில்
வாழ்கிறேன்

அதே கணம் அதே தினம் தொடர்ந்திட
ஏங்கினேன்

People

Related People

7 people