ஒருகுரல் கேட்குது பெண்ணே பாடல் வரிகள்

Last Updated: Jul 18, 2026

Movie Name
Vazhakku Enn 18/9 (2012) (வழக்கு எண் 19/8)
Music
R. Prasanna
Year
2012
Singers
Karthik
Lyrics
ஒருகுரல் கேட்குது பெண்ணே உயிர்விடும் முன்னே
உந்தன் காதில் கேட்டிடுமா கேட்டிடுமா
ஒரு அலை அடிக்குது பெண்ணே கரைதொடும் முன்னே
உந்தன் கைகள் தீண்டிடுமா தீண்டிடுமா

மன கதவு திறந்திடுமா மோதி நானும் பார்க்கிறேன்
பழகிடுமா விலகிடுமா கனவிலும் நினைவிலும்

ஒருகுரல் கேட்குது பெண்ணே உயிர்விடும் முன்னே
உந்தன் காதில் கேட்டிடுமா கேட்டிடுமா
ஒரு அலை அடிக்குது பெண்ணே கரைதொடும் முன்னே
உந்தன் கைகள் தீண்டிடுமா தீண்டிடுமா

முதல்முறை மழைமேகம் எந்தன் வாசல் மேலே
மனம் இன்று ஈரமாகி பாரமாகுதே
இதழ்வரை வரும்வார்தை உந்தன் பார்வையாலே
இடம்விட்டு தடம்மாறி தூரம் போகுதே

தனிமையில் தீயினை தீண்டி தீண்டி நானே
காயத்தோடு வாடும் நேரத்தில் விழிகளில் வரமென
எதிரில் நீயும் வந்தாய் வாழதோன்றுதே

உன் முகம் பார்க்கையில் கண்ணிலே தாய் முகம் வருவது ஏனடி
உன்னிடம் என்ன நான் வேண்டுகிறேன்

ஒருகுரல் கேட்குது பெண்ணே உயிர்விடும் முன்னே
உந்தன் காதில் கேட்டிடுமா கேட்டிடுமா

தொடாமலே தொட்டு பேசும் மூச்சுகாற்றின் வாசம்
விடாமலே என்னை இங்கு கூறுபோடுதே

படாமலே பட்டுபோகும் பட்டு போன்ற கேசம்
எழாமலே என்னை வீழ்த்தி வென்றுபோகுதே
உறவுகள் பிரிவேன வாழ்ந்து வந்தபோது
வானவில்லை காட்டிபோகிறாய் எரிமலை நடுவினில்
பனியை போலவந்து வீசிபோகிறாய்

உனக்கென தந்திட என்னிடம் உயர்ந்தது எதுவும் இல்லையே
உயிரையே தருகிறேன் கண்மனியே

ஒருகுரல் கேட்குது பெண்ணே உயிர்விடும் முன்னே
உந்தன் காதில் கேட்டிடுமா கேட்டிடுமா
ஒரு அலை அடிக்குது பெண்ணே கரைதொடும் முன்னே
உந்தன் கைகள் தீண்டிடுமா தீண்டிடுமா