Kural 1147

Thiru Kural 1147

Chapter 115: அலர் அறிவுறுத்தல்

ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்

நீராக நீளும்இந் நோய்.

Ooravar Kelavai Eruvaaka Annaisol

Neeraaka Neelumin Noi

English Translation

Scandal manures; mother's refrain Waters the growth of this love-pain

Couplet

My anguish grows apace: the town's reportManures it; my mother's word doth water it

Explanation

This malady (of lust) is manured by the talk of women and watered by the (harsh) words of my mother

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

இந்தக் காம நோய் ஊராரின் அலர் தூற்றலே எருவாகவும் அன்னை கடிந்து சொல்லும் கடுஞ்சொல்லே நீராகவும் கொண்டு செழித்து வளர்கின்றது.

Solomon Pappaiah

இந்த ஊர்ப் பெண்கள் பேசும் பேச்சே உரமாக தாயின் தடைச்சொல் நீராக என் காதல் பயிர் வளரும்.

Kalaignar

ஒருவரையொருவர் விரும்பி மலர்ந்த காதலானது ஊர்மக்கள் பேசும் பழிச்சொற்களை எருவாகவும் அன்னையின் கடுஞ்சொற்களை நீராகவும் கொண்டு வளருமே தவிரக் கருகிப் போய்விடாது