Kural 1149

Thiru Kural 1149

Chapter 115: அலர் அறிவுறுத்தல்

அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்

பலர்நாண நீத்தக் கடை.

Alarnaana Olvadho Anjalompu Endraar

Palarnaana Neeththak Katai

English Translation

Who said "fear not" flared up rumour Why then should I blush this clamour?

Couplet

When he who said 'Fear not!' hath left me blamed,While many shrink, can I from rumour hide ashamed

Explanation

When the departure of him who said "fear not" has put me to shame before others, why need I be ashamed of scandal

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

அஞ்ச வேண்டா என்று அன்று உறுதிகூறியவர், இன்று பலரும் நாணும்படியாக நம்மை விட்டுப் பிரிந்தால் அதனால் அலருக்கு நாணியிருக்க முடியுமோ.

Solomon Pappaiah

அலர் பேசிய பலரும் வெட்கப்படும்படி இன்று அவர் என்னை விட்டுப் போகும்போது, பயப்படாதே, உன்னைப் பிரியேன் என்று சொல்லிவிட்டார். இனிப் பலரும் பேசும் பேச்சுக்கு நான் வெட்கப்படலாமா?

Kalaignar

உன்னை விட்டுப் பிரியேன் அஞ்ச வேண்டாம் என்று உறுதியளித்தவர் பலரும் நாணும்படியாக என்னை விட்டுப் பிரிந்து சென்றிருக்கும் போது நான் மட்டும் ஊரார் தூற்றும் அலருக்காக நாண முடியுமா?