Kural 1270

Thiru Kural 1270

Chapter 127: அவர்வயின் விதும்பல்

பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்

உள்ளம் உடைந்துக்கக் கால்.

Perinennaam Petrakkaal Ennaam Urinennaam

Ullam Utaindhukkak Kaal

English Translation

When her heart is broken, what is The good of meeting and love-embrace?

Couplet

What's my return, the meeting hour, the wished-for greeting worth,If she heart-broken lie, with all her life poured forth

Explanation

After (my wife) has died of a broken heart, what good will there be if she is to receive me, has received me, or has even embraced me?

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

துன்பத்தைத் தாங்காமல் மனம் உடைந்து அழிந்து விட்டால், நம்மைத் திரும்பப்‌ பெறுவதனால் என்ன? பெற்றக்கால் என்ன? பெற்றுப் பொருந்தினாலும் என்ன?

Solomon Pappaiah

என் பிரிவைத் தாங்காமல் உள்ளம் உடைய, அவளுக்கு ஒன்று ஆகிவிட்டால் அதன் பிறகு அவள் என்னைப் பெறுவதால் ஆவது என்ன? பெற்றால்தான் என்ன? உடம்போடு கலந்தால்தான் என்ன? ஒரு பயனும் இல்லை.

Kalaignar

துன்பத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் மனம் நிலையிழந்து போயிவிடுமானால், பிறகு ஒருவரையொருவர் திரும்பச் சந்திப்பதனாலோ, சந்தித்துக் கூடவதினாலோ, என்ன பயன்?