Kural 1285

Thiru Kural 1285

Chapter 129: புணர்ச்சி விதும்பல்

எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்

பழிகாணேன் கண்ட இடத்து.

Ezhudhungaal Kolkaanaak Kannepol Konkan

Pazhikaanen Kanta Itaththu

English Translation

When close I see not lord's blemish Like eyes that see not painter's brush

Couplet

The eye sees not the rod that paints it; nor can ISee any fault, when I behold my husband nigh

Explanation

Like the eyes which see not the pencil that paints it, I cannot see my husband's fault (just) when I meet him

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

மை தீட்டும் நேரத்தில் தீட்டு் கோலைக் காணாத கண்களைப் போல், காதலனைக் கண்டபோது மட்டும் அவனுடைய குற்றத்தை நினைக்காமல் மறந்து விடுகின்றேன்.

Solomon Pappaiah

முன்பு பார்த்திருந்தும் மை தீட்டும்போது அஞ்சனக் கோலைக் காணாத கண்களைப் போல, கணவனின் தவற்றை அவர் இல்லாதபோது எண்ணி இருந்தும், நேரில் அவரைக் கண்ட போது காணேன்.

Kalaignar

கண்ணில் மை தீட்டிக் கொள்ளும் பொழுது அந்த மை தீட்டும் கோலைக் காணாதது போலவே, காதலனைக் காணும்பொழுது அவன் என்னைப் பிரிந்து சென்ற குற்றத்தை மறந்து விடுகிறேன்