Kural 1289

Thiru Kural 1289

Chapter 129: புணர்ச்சி விதும்பல்

மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்

செவ்வி தலைப்படு வார்.

Malarinum Mellidhu Kaamam Silaradhan

Sevvi Thalaippatu Vaar

English Translation

Flower-soft is love; a few alone Know its delicacy so fine

Couplet

Love is tender as an opening flower In season dueTo gain its perfect bliss is rapture known to few

Explanation

Sexual delight is more delicate than a flower, and few are those who understand its real nature

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

காமம் மலரை விட மென்மை உடையதாகும்; அந்த உண்மை அறிந்து அதன் நல்ல பயனைப் பெறக்கூடியவர் சிலரே.

Solomon Pappaiah

காதல் இன்பம் மலரைவிட மென்மையானது. அதை அறிந்து அனுபவிப்பதற்கு ஏற்ற இடம், காலம், தேவையானவை எல்லாம் பெற்றுக் காதல் இன்பத்தின் நலனை அனுபவிப்பவர் இவ்வுலகில் சிலரே

Kalaignar

காதல் இன்பம், மலரைவிட மென்மையானது அதனை அதே மென்மையுடன் நுகருபவர்கள் சிலரே ஆவார்கள்