Kural 141

Thiru Kural 141

Chapter 15: பிறனில் விழையாமை

பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து

அறம்பொருள் கண்டார்கண் இல்.

Piranporulaal Pettozhukum Pedhaimai Gnaalaththu

Aramporul Kantaarkan Il

English Translation

Who know the wealth and virtue's way After other's wife do not stray

Couplet

Who laws of virtue and possession's rights have known,Indulge no foolish love of her by right another's own

Explanation

The folly of desiring her who is the property of another will not be found in those who know (the attributes of) virtue and (the rights of) property

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

பிறனுடைய உரிமையாகிய மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்தில் அறமும் பொருளும் ஆராய்ந்து கண்டவரிடம் இல்லை.

Solomon Pappaiah

இவ்வுலகில் அறத்தையும், பொருளையும் கற்று அறிந்தவரிடம் அடுத்தவனின் உரிமை ஆகிய மனைவி மீது ஆசைப்பட்டு வாழும் அறியாமை இல்லை.

Kalaignar

பிறன் மனைவியிடத்து விருப்பம் கொள்ளும் அறியாமை, உலகில் அறநூல்களையும் பொருள் நூல்களையும் ஆராய்ந்து உணர்ந்தவர்களிடம் இல்லை