Kural 143

Thiru Kural 143

Chapter 15: பிறனில் விழையாமை

விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்

தீமை புரிந்து ஒழுகு வார்.

Vilindhaarin Verallar Mandra Thelindhaaril

Theemai Purindhu Ozhuku Vaar

English Translation

The vile are dead who evil aim And put faithful friends' wives to shame

Couplet

They're numbered with the dead, e'en while they live, -how otherwise?With wife of sure confiding friend who evil things devise

Explanation

Certainly they are no better than dead men who desire evil towards the wife of those who

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

ஐயமில்லாமல் தெளிந்து நம்பியவருடைய மனைவியிடத்தே விருப்பம் கொண்டு தீமையைச் செய்து நடப்பவர், செத்தவரை விட வேறுபட்டவர் அல்லர்.

Solomon Pappaiah

தன்னைச் சந்தேகப்படாதவரின் வீட்டிற்குள் நுழைந்து, அடுத்தவரின் மனைவியுடன் தவறான தொடர்பு கொண்டு வாழ்பவன், இறந்து போனவனே அன்றி உயிருடன் வாழ்பவன் அல்லன்

Kalaignar

நம்பிக் பழகியவர் வீட்டில், அவரது மனைவியிடம் தகாத செயலில் ஈடுபட முனைகிறவன், உயிர் இருந்தும் பிணத்திற்கு ஒப்பானவனேயாவான்