Kural 171

Thiru Kural 171

Chapter 18: வெஃகாமை

நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்

குற்றமும் ஆங்கே தரும்.

Natuvindri Nanporul Veqkin Kutipondrik

Kutramum Aange Tharum

English Translation

Who covets others' honest wealth That greed ruins his house forthwith

Couplet

With soul unjust to covet others' well-earned store,Brings ruin to the home, to evil opes the door

Explanation

If a man departing from equity covet the property (of others), at that very time will his family be destroyed and guilt be incurred

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

நடுவுநிலைமை இல்லாமல் பிறர்க்குரிய நல்ல பொருளை ஒருவன் கவர விரும்பினால் அவனுடைய குடியும் கெட்டுக் குற்றமும் அப்போழுதே வந்து சேரும்.

Solomon Pappaiah

பிறர்க்குரிய பொருளை அநீதியாக விரும்பிக் கவர்ந்தால், கவர்ந்தவனின் குடும்பம் அழியும்; குற்றங்கள் பெருகும்.

Kalaignar

மனச்சான்றை ஒதுக்கிவிட்டுப் பிறர்க்குரிய அரும் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்புகிறவரின் குடியும் கெட்டொழிந்து, பழியும் வந்து சேரும்