Chapter 111

புணர்ச்சி மகிழ்தல்

Punarchchimakizhdhal

Rejoicing in the Embrace

10 kurals

Kural 1101 கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.
In this bangled beauty dwell The joys of sight sound touch taste smell
Kural 1102 பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து.
The cure for ailment is somewhere For fair maid's ill she is the cure
Kural 1103 தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு.
Is lotus-eyed lord's heaven so sweet As sleep in lover's arms so soft?
Kural 1104 நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்?
Away it burns and cools anear Wherefrom did she get this fire?
Kural 1105 வேட் ட பொழுதின் அவையவை போலுமே
தோட் டார் கதுப்பினாள் தோள்.
The arms of my flower-tressed maid Whatever I wish that that accord
Kural 1106 உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்.
My simple maid has nectar arms Each embrace brings life-thrilling charms
Kural 1107 தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு.
Ah the embrace of this fair dame Is like sharing one's food at home
Kural 1108 வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு.
Joy is the fast embrace that doth Not admit e'en air between both
Kural 1109 ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்.
Sulking, feeling and clasping fast These three are sweets of lover's tryst
Kural 1110 அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு.
As knowledge reveals past ignorance So is the belle as love gets close