Chapter 117

படர்மெலிந் திரங்கல்

Patarmelindhirangal

Complainings

10 kurals

Kural 1161 மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும்.
It swells out like baled out spring How to bear this pain so writhing?
Kural 1162 கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு
உரைத்தலும் நாணுத் தரும்.
I can't conceal this nor complain For shame to him who caused this pain
Kural 1163 காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்
நோனா உடம்பின் அகத்து.
In life -poles of this wearied frame Are poised the weights of lust and shame
Kural 1164 காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல்.
My lust is a sea; I do not see A raft to go across safely
Kural 1165 துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு
நட்பினுள் ஆற்று பவர்.
What wilt they prove when they are foes Who in friendship bring me woes!
Kural 1166 இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது.
The pleasure in love is oceanful But its pangs are more painful
Kural 1167 காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன்.
Wild waves of love I swim shoreless Pining alone in midnight hush
Kural 1168 மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
என்னல்லது இல்லை துணை.
Night's mercy lulls all souls to sleep Keeping but me for companionship
Kural 1169 > கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்
நெடிய கழியும் இரா.
Crueller than that cruel he Are midnight hours gliding slowly
Kural 1170 உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோஎன் கண்.
Like heart, if my sight reaches him It won't in floods of tears swim!