Chapter 9

விருந்தோம்பல்

Virundhompal

Hospitality

10 kurals

Kural 81 இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.
Men set up home, toil and earn To tend the guests and do good turn
Kural 82 விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண் டற்பாற் றன்று.
To keep out guests cannot be good Albeit you eat nector-like food
Kural 83 வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.
Who tends his guests day in and out His life in want never wears out
Kural 84 அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.
The goddess of wealth will gladly rest Where smiles welcome the worthy guest
Kural 85 வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்.
Should his field be sown who first Feeds the guests and eats the rest?
Kural 86 செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்வருந்து வானத் தவர்க்கு.
Who tends a guest and looks for next Is a welcome guest in heaven's feast
Kural 87 இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.
Worth of the guest of quality Is worth of hospitality
Kural 88 பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்.
Who loathe guest-service one day cry: "We toil and store; but life is dry"
Kural 89 உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.
The man of wealth is poor indeed Whose folly fails the guest to feed
Kural 90 மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குநழ்யும் விருந்து.
Anicham smelt withers: like that A wry-faced look withers the guest