Kural 1075

Thiru Kural 1075

Chapter 108: கயமை

அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்

அவாவுண்டேல் உண்டாம் சிறிது.

Achchame Keezhkaladhu Aasaaram Echcham

Avaavuntel Untaam Siridhu

English Translation

Fear forms the conduct of the low Craving avails a bit below

Couplet

Fear is the base man's virtue; if that fail,Intense desire some little may avail

Explanation

(The principle of) behaviour in the mean is chiefly fear; if not, hope of gain, to some extent

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

கீழ் மக்களின் ஆசாரத்திற்கு காரணமாக இருப்பது அச்சமே, எஞ்சியவற்றில் அவா உண்டானால் அதனாலும் சிறிதளவு ஆசாரம் உண்டாகும்.

Solomon Pappaiah

கயவர்களிடம் நல்ஒழுக்கம் இருந்தால் ஆட்சியைப் பற்றிய பயமே காரணம் ஆகும். அதையும் மீறி அவர்கள் ஆசைப்படும் பொருள் கிடைப்பதாக இருந்தால் அதனாலும் கொஞ்சம் ஒழுக்கம் இருக்கும்.

Kalaignar

தாங்கள் விரும்புவது கிடைக்கும் என்ற நிலையேற்படும்போது கீழ்மக்கள், தங்களை ஒழுக்கமுடையவர்கள் போலக் காட்டிக் கொள்வார்கள் மற்ற சமயங்களில் அவர்கள் பயத்தின் காரணமாக மட்டுமே ஓரளவு ஒழுக்கமுள்ளவர்களாக நடந்து கொள்வார்கள்