Kural 1078

Thiru Kural 1078

Chapter 108: கயமை

சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்

கொல்லப் பயன்படும் கீழ்.

Sollap Payanpatuvar Saandror Karumpupol

Kollap Payanpatum Keezh

English Translation

The good by soft words profits yield The cane-like base when crushed and killed

Couplet

The good to those will profit yield fair words who use;The base, like sugar-cane, will profit those who bruise

Explanation

The great bestow (their alms) as soon as they are informed; (but) the mean, like the sugar-cane, only when they are tortured to death

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

அணுகி குறைச் சொல்லுகின்ற அளவிலேயே சான்றோர் பயன்படுவர், கரும்புபோல் அழித்துப் பிழிந்தால் தான் கீழ்மக்கள் பயன்படுவர்.

Solomon Pappaiah

இல்லாதவர் சென்று தம் நிலையைச் சொன்ன அளவில், சான்றோர் இரங்கிக் கொடுப்பர்; கயவர்களோ கரும்பைப் பிழிவதுபோல் பிழிந்தால்தான் கொடுப்பர்.

Kalaignar

குறைகளைச் சொன்னவுடனே சான்றோரிடம் கோரி பயனைப் பெற முடியும்; ஆனால் கயவரிடமோ கரும்பை நசுக்கிப் பிழிவதுபோல், போராடித்தான் கோரிய பயனைப் பெற முடியும்