Kural 1140

Thiru Kural 1140

Chapter 114: நாணுத் துறவுரைத்தல்

யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்

யாம்பட்ட தாம்படா ஆறு.

Yaamkannin Kaana Nakupa Arivillaar

Yaampatta Thaampataa Aaru

English Translation

Fools laugh at me before my eyes For they feel not my pangs and sighs

Couplet

Before my eyes the foolish make a mock of me,Because they ne'er endured the pangs I now must drie

Explanation

Even strangers laugh (at us) so as to be seen by us, for they have not suffered

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

யாம் பட்ட துன்பங்களைத் தாம் படாமையால் அறிவில்லாதவர் யாம் கண்ணால் காணுமாறு எம் எதிரில் எம்மைக்கண்டு நகைக்கின்றனர்.

Solomon Pappaiah

நான் பார்க்க, இந்த அறிவற்ற மக்கள் என்னைப் பார்த்துச் சிரிக்கின்றனர். அப்படிச் சிரிக்க காரணம், நான் அனுபவித்த துன்பங்களை அவர்கள் அனுபவிக்காததே!

Kalaignar

காதல் நோயினால் வாடுவோரின் துன்பத்தை அனுபவித்தறியாதவர்கள்தான், அந்த நோயினால் வருந்துவோரைப் பார்த்து நகைப்பார்கள்