Kural 1172

Thiru Kural 1172

Chapter 118: கண் விதுப்பழிதல்

தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்

பைதல் உழப்பது எவன்?

Therindhunaraa Nokkiya Unkan Parindhunaraap

Paidhal Uzhappadhu Evan?

English Translation

Why should these dyed eyes grieve now sans Regrets for their thoughtless glance?

Couplet

How glancing eyes, that rash unweeting looked that day,With sorrow measureless are wasting now away

Explanation

The dyed eyes that (then) looked without foresight, why should they now endure sorrow, without feeling sharply (their own fault)

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

ஆராய்ந்து உணராமல் அன்று நோக்கிக் காதல் கொண்ட கண்கள், இன்று அன்பு கொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்?

Solomon Pappaiah

வரப்போவதை அறியாமல் அன்று அவரை எனக்குக் காட்டிய என் மை தீட்டப்பட்ட கண்கள், இன்று இது நம்மால் வந்தது; நாம்தாம் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணாமல் துன்பப்படுகின்றனவே எதற்காக?

Kalaignar

விளைவுகளை உணராமல் மயங்கி நோக்கிய மைவிழிகள், இன்று, காதலரைப் பிரிந்ததால் துன்பமுறுவது தம்மால் தான் என அறியாமல் தவிப்பது ஏன்?