Kural 1177

Thiru Kural 1177

Chapter 118: கண் விதுப்பழிதல்

உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து

வேண்டி அவர்க்கண்ட கண்.

Uzhandhuzhan Thulneer Aruka Vizhaindhizhaindhu

Venti Avarkkanta Kan

English Translation

Let tears dry up pining pining In eyes that eyed him longing longing

Couplet

Aching, aching, let those exhaust their stream,That melting, melting, that day gazed on him

Explanation

The eyes that became tender and gazed intently on him, may they suffer so much as to dry up the fountain of their tears

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

அன்று விரும்பி நெகிழ்ந்து காதலரைக் கண்ட கண்கள் இன்று உறக்கமில்லாத துன்பத்தால் வருந்தி வருந்திக் கண்ணீரும் அற்றுப் போகட்டும்.

Solomon Pappaiah

விரும்பி மகிழ்ந்து விடாமல் அன்று அவரைக் கண்ட கண்களின் உள் இருக்கும் கண்ணீர் எல்லாம் இன்று வருந்தி வருந்தி வற்றிப் போகட்டும்!

Kalaignar

அன்று, இழைந்து குழைந்து ஆசையுடன் அவரைக் கண்ட கண்களே! இன்று பிரிந்து சென்றுள்ள அவரை நினைத்துக் தூங்காமலும், துளிக் கண்ணீரும் அற்றுப்போகும் நிலையிலும் துன்பப்படுங்கள்