Kural 118

Thiru Kural 118

Chapter 12: நடுவு நிலைமை

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்

கோடாமை சான்றோர்க் கணி.

Samanseydhu Seerdhookkung Kolpol Amaindhorupaal

Kotaamai Saandrork Kani

English Translation

Like balance holding equal scales A well poised mind is jewel of the wise

Couplet

To stand, like balance-rod that level hangs and rightly weighs,With calm unbiassed equity of soul, is sages' praise

Explanation

To incline to neither side, but to rest impartial as the even-fixed scale is the ornament of the wise

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

முன்னே தான் சமமாக இருந்து, பின்பு பொருளைச் சீர்தூக்கும் துலாக்கோல் போல் அமைந்து, ஒரு பக்கமாக சாயாமல் நடுவுநி‌லைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும்.

Solomon Pappaiah

முதலில் சமமாக நின்று பிறகு தன்மீது வைக்கப்பட்ட பாரத்தை நிறுத்துக் காட்டும் தராசு போல, நீதிக்குரிய இலக்கணங்களால் அமைந்து ஓரம் சார்ந்து விடாமல் இருப்பது சான்றோராகிய நீதிபதிகளுக்கு அழகாம்.

Kalaignar

ஒரு பக்கம் சாய்ந்து விடாமல் நாணயமான தாரசு முள் போல இருந்து நியாயம் கூறுவதுதான் உண்மையான நடுவுநிலைமை என்பதற்கு அழகாகும்