Kural 1184

Thiru Kural 1184

Chapter 119: பசப்புறு பருவரல்

உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்

கள்ளம் பிறவோ பசப்பு.

Ulluvan Manyaan Uraippadhu Avardhiramaal

Kallam Piravo Pasappu

English Translation

He is my thought, his praise my theme Yet this pallor steals over my frame

Couplet

I meditate his words, his worth is theme of all I say,This sickly hue is false that would my trust betray

Explanation

I think (of him); and what I speak about is but his excellence; still is there sallowness; and this is deceitful

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

யான் அவருடைய நல்லியல்புகளை நினைக்கின்றேன்; யான் உரைப்பதும் அவற்றையே; அவ்வாறிருந்தும் பசலை வந்தது வஞ்சனையோ? வேறு வகையோ?

Solomon Pappaiah

நான் நினைப்பதெல்லாம் அவரைத்தான். சொல்வது எல்லாம் அவர் குணங்களைத்தாம்; இருந்தும் இந்தப் பசலை வந்துவிட்டதே; இது வஞ்சகம் அல்லவா?

Kalaignar

யான் நினைப்பதும், உரைப்பதும் அவரது நேர்மைத் திறன் பற்றியதாகவே இருக்கும்போது, என்னையறியாமலோ வேறு வழியிலோ இப்பசலை நிறம் வந்தது எப்படி?