Kural 1223

Thiru Kural 1223

Chapter 123: பொழுதுகண்டு இரங்கல்

பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்

துன்பம் வளர வரும்.

Paniarumpip Paidhalkol Maalai Thuniarumpith

Thunpam Valara Varum

English Translation

Wet eve came pale and trembling then Now it makes bold with growing pain

Couplet

With buds of chilly dew wan evening's shade enclose;My anguish buds space and all my sorrow grows

Explanation

The evening that (once) came in with trembling and dimness (now) brings me an aversion for life and increasing sorrow

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

பனி தோன்றிப் பசந்த நிறம் கொண்ட மாலைப் பொழுது எனக்கு வருத்தம் ஏற்பட்டுத் துன்பம் மேன்மேலும் வளரும்படியாக வருகின்றது.

Solomon Pappaiah

அவர் என்னைப் பிரிவதற்கு முன்பு என்முன் வரவே நடுக்கம் எய்தி மேனி கறுத்து வந்த இந்த மாலைப் பொழுது இப்போது எனக்குச் சாவு வரும்படி தோன்றி, அதற்கான துன்பம் பெருகும்படி நாளும் வருகின்றது.

Kalaignar

பக்கத்தில் என் காதலர் இருந்த போது பயந்து, பசலை நிறத்துடன் வந்த மாலைப் பொழுது, இப்போது என் உயிரை வெறுக்குமளவுக்குத் துன்பத்தை மிகுதியாகக் கொண்டு வருகிறது