Kural 1227

Thiru Kural 1227

Chapter 123: பொழுதுகண்டு இரங்கல்

காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி

மாலை மலரும்இந் நோய்.

Kaalai Arumpip Pakalellaam Podhaaki

Maalai Malarumin Noi

English Translation

Budding at dawn burgeoning all day This disease blooms in evening gay

Couplet

My grief at morn a bud, all day an opening flower,Full-blown expands in evening hour

Explanation

This malady buds forth in the morning, expands all day long and blossoms in the evening

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

இந்த காமநோய், காலைப்பொழுதில் அரும்பாய்த் தோன்றி, பகற்பொழுதெல்லாம் பேரரும்பாய் வளர்ந்து மாலைப்பொழுதில் மலராகின்றது.

Solomon Pappaiah

காதல் துன்பமாகிய இப்பூ, காலையில் அரும்புகிறது; பகலில் முதிர்கிறது; மாலைப்பொழுதில் மலர்ந்து விடுகிறது.

Kalaignar

காதல் என்பது காலையில் அரும்பாகி, பகல் முழுதும் முதிர்ச்சியடைந்து, மாலையில் மலரும் ஒரு நோயாகும்