Kural 123

Thiru Kural 123

Chapter 13: அடக்கம் உடைமை

செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து

ஆற்றின் அடங்கப் பெறின்.

Serivarindhu Seermai Payakkum Arivarindhu

Aatrin Atangap Perin

English Translation

Knowing wisdom who lives controlled Name and fame seek him untold

Couplet

If versed in wisdom's lore by virtue's law you self restrainYour self-repression known will yield you glory's gain

Explanation

Knowing that self-control is knowledge, if a man should control himself, in the prescribed course, such self-control will bring him distinction among the wise

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

அறிய வேண்டியவற்றை அறிந்து, நல்வழியில் அடங்கி ஒழுகப்பெற்றால், அந்த அடக்கம் நல்லோரால் அறியப்பட்டு மேன்மை பயக்கும்.

Solomon Pappaiah

அடக்கத்துடன் வாழ்வதே அறிவுடைமை என்று அறிந்து, ஒருவன் அடக்கமாக வாழ்ந்தால் அவனது அடக்கம் நல்லவர்களால் அறியப்பட்டு அது அவனுக்குப் பெருமையைக் கொடுக்கும்.

Kalaignar

அறிந்து கொள்ள வேண்டியவற்றை அறிந்து அதற்கேற்ப அடக்கத்துடன் நடந்து கொள்பவரின் பண்பை உணர்ந்து பாராட்டுகள் குவியும்