Kural 1237

Thiru Kural 1237

Chapter 124: உறுப்புநலன் அழிதல்

பாடுபெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்

வாடுதோட் பூசல் உரைத்து.

Paatu Perudhiyo Nenje Kotiyaarkken

Vaatudhot Poosal Uraiththu

English Translation

Go and tell the cruel, O mind Bruit ov'r my arms and glory find

Couplet

My heart! say ought of glory wilt thou gain,If to that cruel one thou of thy wasted arms complain

Explanation

Can you O my soul! gain glory by relating to the (so-called) cruel one the clamour of my fading shoulders?

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

நெஞ்சே! கொடியவர் என்று சொல்லப்படுகின்ற காதலர்க்கு என் மெலிந்த தோள்களின் ஆரவாரத்தை உரைத்து, அந்த உதவியால் பெருமை அடைவாயோ?

Solomon Pappaiah

நெஞ்சே! கொடுமையானவராகிய அவரிடம் சென்று என் மெலியும் தோள்களினால் ஏற்பட்டுள்ள வெற்றுரைகளைச் சொல்லி நீ பெருமை பெறுவாயோ?

Kalaignar

நெஞ்சே! இரக்கமற்று என்னைப் பிரிந்திருக்கும் அவருக்கும் வாடி வதங்கும் என் தோள்களின் துன்பத்தை உரைத்துப் பெருமை அடைய மாட்டாயோ?