Kural 1241

Thiru Kural 1241

Chapter 125: நெஞ்சொடு கிளத்தல்

நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்

எவ்வநோய் தீர்க்கும் மருந்து.

Ninaiththondru Sollaayo Nenje Enaiththondrum

Evvanoi Theerkkum Marundhu

English Translation

Think of, O heart, some remedy To cure this chronic malady

Couplet

My heart, canst thou not thinking of some med'cine tell,Not any one, to drive away this grief incurable

Explanation

O my soul, will you not think and tell me some medicine be it what it may, that can cure this incurable malady?

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

நெஞ்சே! ( காதலால் வளர்ந்த) இத் துன்ப நோயைத் தீர்க்கும் மருந்து ஏதாவது ஒன்றை நீ நினைத்துப் பார்த்து எனக்குச் சொல்ல மாட்டாயோ?

Solomon Pappaiah

நெஞ்சே! எதனாலும் தீராத என் நோயைத் தீர்க்கும் மருந்து ஏதாவது ஒன்றை எண்ணிப் பார்த்துச் சொல்லமாட்டாயா?

Kalaignar

எந்த மருந்தினாலும் தீராத என் காதல் நோய் தீர்ந்திட ஏதாவது ஒரு மருந்தை நினைத்துப் பார்த்து, நெஞ்சே! உன்னால் சொல்ல முடியுமா?