Kural 1252

Thiru Kural 1252

Chapter 126: நிறையழிதல்

காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை

யாமத்தும் ஆளும் தொழில்.

Kaamam Enavondro Kannindren Nenjaththai

Yaamaththum Aalum Thozhil

English Translation

The thing called lust is a heartless power It sways my mind at midnight hour

Couplet

What men call love is the one thing of merciless power;It gives my soul no rest, e'en in the midnight hour

Explanation

Even at midnight is my mind worried by lust, and this one thing, alas! is without mercy

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

காமம் என்று சொல்லப்படுகின்ற ஒன்று கண்ணோட்டம் இல்லாதது. அது என் நெஞ்சத்தை நள்ளிரவில் ஏவல் கொண்டு ஆள்கிறது.

Solomon Pappaiah

எல்லாரும் வேலையின்றி உறங்கும் நடுச்சாமத்திலும் என் நெஞ்சத்தைத் தண்டித்து வேலை வாங்குவதால் காதல் என்று சொல்லப்படும் ஒன்று இரக்கமற்றதாக இருக்கிறது.

Kalaignar

காதல் வேட்கை எனப்படும் ஒன்று இரக்கமே இல்லாதது; ஏனெனில் அது என் நெஞ்சில் நள்ளிரவிலும் ஆதிக்கம் செலுத்தி அலைக்கழிக்கிறது