Kural 1307

Thiru Kural 1307

Chapter 131: புலவி

ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது

நீடுவ தன்று கொல் என்று.

Ootalin Untaangor Thunpam Punarvadhu

Neetuva Thandru Kol Endru

English Translation

"Will union take place soon or late?" In lover's pout this leaves a doubt

Couplet

A lovers' quarrel brings its pain, when mind afraidAsks doubtful, 'Will reunion sweet be long delayed?'

Explanation

The doubt as to whether intercourse would take place soon or not, creates a sorrow (even) in feigned dislike

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

கூடியிருக்கும் இன்பம் இனிமேல் நீட்டிக்காதோ என்று ஏங்கி எண்ணுவதால் ஊடியிருத்தலினும் காதலர்க்கு ஒருவகைத் துன்பம் இருக்கின்றது.

Solomon Pappaiah

இனிக் கலவி நீளுமோ நீளாதோ என்று எண்ணுவதால், இன்பத்திற்கு இன்றியமையாத ஊடலிலும் ஒரு துன்பம் உண்டு.

Kalaignar

கூடி மயங்கிக் களித்திருக்கும் இன்பமான காலத்தின் அளவு குறைந்து விடுமோ என எண்ணுவதால் ஊடலிலும் ஒருவகைத் துன்பம் காதலர்க்கு உண்டு