Kural 1310

Thiru Kural 1310

Chapter 131: புலவி

ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்

கூடுவேம் என்பது அவா.

Ootal Unanga Vituvaarotu Ennenjam

Kootuvem Enpadhu Avaa

English Translation

My heart athirst would still unite With her who me in sulking left!

Couplet

Of her who leaves me thus in variance languishing,To think within my heart with love is fond desire

Explanation

It is nothing but strong desire that makes her mind unite with me who can leave her to her own dislike

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

ஊடல் கொண்ட‌போது உணர்த்தி மகிழ்விக்காமல் வாட விடுகின்றவரோடு என் நெஞ்சம் கூடியிருப்போம் என்று முயல்வதற்குக் காரணம் அதன் ஆசையே.

Solomon Pappaiah

ஊடி, என் நெஞ்சை வாட விட்டிருப்பவனோடும் கூடுவோம் என்று என் நெஞ்சம் முயல்வதற்குக் காரணம் ஆசையே.

Kalaignar

ஊடலைத் தணிக்காமல் வாடவிட்டு வேடிக்கை பார்ப்பவருடன் கூடியிருப்போம் என்று என் நெஞ்சம் துடிப்பதற்கு அதன் அடங்காத ஆசையே காரணம்