Kural 15

Thiru Kural 15

Chapter 2: வான்சிறப்பு

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை.

Ketuppadhooum Kettaarkkuch Chaarvaaimar Raange

Etuppadhooum Ellaam Mazhai

English Translation

Destruction it may sometimes pour But only rain can life restore

Couplet

'Tis rain works all: it ruin spreads, then timely aid supplies;As, in the happy days before, it bids the ruined rise

Explanation

Rain by its absence ruins men; and by its existence restores them to fortune

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்

Solomon Pappaiah

பெய்யாமல் மக்களைக் கெடுப்பதும்; பெய்து கெட்டவரைத் திருத்துவதும் எல்லாமே மழைதான்

Kalaignar

பெய்யாமல் விடுத்து உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடியதும், பெய்வதன் காரணமாக உயிர்களின் நலிந்த வாழ்வுக்கு வளம் சேர்ப்பதும் மழையே ஆகும்