Kural 192

Thiru Kural 192

Chapter 20: பயனில சொல்லாமை

பயனில பல்லார்முன் சொல்லல் நயனில

நட்டார்கண் செய்தலிற் றீது.

Payanila Pallaarmun Sollal Nayanila

Nattaarkan Seydhalir Reedhu

English Translation

Vain talk before many is worse Than doing to friends deeds adverse

Couplet

Words without sense, where many wise men hear, to pourThan deeds to friends ungracious done offendeth more

Explanation

To speak useless things in the presence of many is a greater evil than to do unkind things towards friends

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

பலர் முன்னே பயனில்லாத சொற்களைச் சொல்லுதல், நண்பரிடத்தில் அறம் இல்லா செயல்களைச் செய்தலை விடத் தீமையானதாகும்.

Solomon Pappaiah

ஒருவன் பலருக்கும் முன்னே பயனற்ற சொற்களைச் சொல்வது, நண்பர்களுக்குத் தீமை செய்வதைக் காட்டிலும் கொடியது.

Kalaignar

பலர்முன் பயனில்லாத சொற்களைக் கூறுவது, நட்புக்கு மாறாகச் செயல்படுவதைக் காட்டிலும் தீமையுடையதாகும்