Chapter 20

பயனில சொல்லாமை

Payanila Sollaamai

Against Vain Speaking

10 kurals

Kural 191 பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.
With silly words who insults all Is held in contempt as banal
Kural 192 பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலிற் றீது.
Vain talk before many is worse Than doing to friends deeds adverse
Kural 193 நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை.
The babbler's hasty lips proclaim That "good-for-nothing" is his name
Kural 194 நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து.
Vain words before an assembly Will make all gains and goodness flee
Kural 195 சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்.
Glory and grace will go away When savants silly nonsense say
Kural 196 பயனில் சொல் பராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல்.
Call him a human chaff who prides Himself in weightless idle words
Kural 197 நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று.
Let not men of worth vainly quack Even if they would roughly speak
Kural 198 அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்.
The wise who weigh the worth refrain From words that have no grain and brain
Kural 199 பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்.
The wise of spotless self-vision Slip not to silly words-mention
Kural 200 சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.
To purpose speak the fruitful word And never indulge in useless load