Kural 197

Thiru Kural 197

Chapter 20: பயனில சொல்லாமை

நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்

பயனில சொல்லாமை நன்று.

Nayanila Sollinunj Cholluka Saandror

Payanila Sollaamai Nandru

English Translation

Let not men of worth vainly quack Even if they would roughly speak

Couplet

Let those who list speak things that no delight afford,'Tis good for men of worth to speak no idle word

Explanation

Let the wise if they will, speak things without excellence; it will be well for them not to speak useless things

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

அறம் இல்லாதவற்றைச் சொன்னாலும் சொல்லலாம், சான்றோர் பயன் இல்லாத சொற்களைச் சொல்லாமல் இருத்தல் நன்மையாகும்.

Solomon Pappaiah

நீதியற்ற சொற்களைச் சொன்னாலும் பயனற்ற சொற்களைச் சொல்லாமல் இருப்பது சான்றோர்க்கு நல்லது.

Kalaignar

பண்பாளர்கள், இனிமையல்லாத சொற்களைக்கூடச் சொல்லி விடலாம்; ஆனால் பயனில்லாத சொற்களைச் சொல்லாமல் இருப்பதே நல்லது