Kural 206

Thiru Kural 206

Chapter 21: தீவினையச்சம்

தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால

தன்னை அடல்வேண்டா தான்.

Theeppaala Thaanpirarkan Seyyarka Noippaala

Thannai Atalventaa Thaan

English Translation

From wounding others let him refrain Who would from harm himself remain

Couplet

What ranks as evil spare to do, if thou would'st shunAffliction sore through ill to thee by others done

Explanation

Let him not do evil to others who desires not that sorrows should pursue him

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

துன்பம் செய்யும் தீவினைகள் தன்னை வருத்துதலை விரும்பாதவன், தீயசெயல்களைத் தான் பிறருக்குச் செய்யாமலிருக்க வேண்டும்.

Solomon Pappaiah

துன்பம் தருவன தன்னைச் சூழ்ந்து வருத்த விரும்பாதவன், பிறர்க்குத் தீமை செய்யக்கூடாது.

Kalaignar

வேதனை விளைவிக்கும் தீய செயல்கள் தன்னைத் தாக்கலாகாது என எண்ணுகிறவன் அவனும் அத்தீங்குகளைப் பிறருக்குச் செய்யாமல் இருக்க வேண்டும்