Kural 221

Thiru Kural 221

Chapter 23: ஈகை

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்

குறியெதிர்ப்பை நீர துடைத்து.

Variyaarkkondru Eevadhe Eekaimar Rellaam

Kuriyedhirppai Neera Thutaiththu

English Translation

To give the poor is charity The rest is loan and vanity

Couplet

Call that a gift to needy men thou dost dispense,All else is void of good, seeking for recompense

Explanation

To give to the destitute is true charity All other gifts have the nature of (what is done for) a measured return

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது, மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயன் எதிர்பார்த்து கொடுக்கும் தன்மை உடையது.

Solomon Pappaiah

ஏதும் இல்லாதவர்க்குக் கொடுப்பதே ஈகை; பிற எல்லாம் கொடுத்ததைத் திரும்பப் பெறும் நோக்கம் உடையதே.

Kalaignar

இல்லாதவர்க்கு வழங்குவதே ஈகைப் பண்பாகும் மற்றவர்களுக்கு வழங்குவது என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை எதிர்பார்த்து வழங்கப்படுவதாகும்