Chapter 23

ஈகை

Eekai

Giving

10 kurals

Kural 221 வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.
To give the poor is charity The rest is loan and vanity
Kural 222 நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று.
To beg is bad e'en from the good To give is good, were heaven forbid
Kural 223 இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள.
No pleading, "I am nothing worth," But giving marks a noble birth
Kural 224 இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணும் அளவு.
The cry for alms is painful sight Until the giver sees him bright
Kural 225 ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.
Higher's power which hunger cures Than that of penance which endures
Kural 226 அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.
Drive from the poor their gnawing pains If room you seek to store your gains
Kural 227 பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது.
Who shares his food with those who need Hunger shall not harm his creed
Kural 228 ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்.
The joy of give and take they lose Hard-hearted rich whose hoarding fails
Kural 229 இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்.
Worse than begging is that boarding Alone what one's greed is hoarding
Kural 230 சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை.
Nothing is more painful than death Yet more is pain of giftless dearth