Kural 227

Thiru Kural 227

Chapter 23: ஈகை

பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்

தீப்பிணி தீண்டல் அரிது.

Paaththoon Mareei Yavanaip Pasiyennum

Theeppini Theental Aridhu

English Translation

Who shares his food with those who need Hunger shall not harm his creed

Couplet

Whose soul delights with hungry men to share his meal,The hand of hunger's sickness sore shall never feel

Explanation

The fiery disease of hunger shall never touch him who habitually distributes his food to others

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

தான் பெற்ற உணவை பலரோடும் பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவனை பசி என்று கூறப்படும் தீயநோய் அணுகுதல் இல்லை.

Solomon Pappaiah

பலருடனும் பகிர்ந்து உண்ணப் பழகியவனைப் பசி என்னும் கொடிய நோய் தொடுவதும் அரிது.

Kalaignar

பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவர்களைப் பசியென்னும் கொடிய நோய் அணுகுவதில்லை