Kural 234

Thiru Kural 234

Chapter 24: புகழ்

நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்

போற்றாது புத்தேள் உலகு.

Nilavarai Neelpukazh Aatrin Pulavaraip

Potraadhu Puththel Ulaku

English Translation

From hailing gods heavens will cease To hail the men of lasting praise

Couplet

If men do virtuous deeds by world-wide ample glory crowned,The heavens will cease to laud the sage for other gifts renowned

Explanation

If one has acquired extensive fame within the limits of this earth, the world of the Gods will no longer praise those sages who have attained that world

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

நிலவுலகின் எல்லையில் நெடுங்காலம் நிற்கவல்ல புகழைச் செய்தால், வானுலகம் (அவ்வாறு புகழ் செய்தாரைப் போற்றுமே அல்லாமல்) தேவரைப் போற்றாது..

Solomon Pappaiah

தன்னில் வாழும்அறிஞரைப் போற்றாமல், இந்த நில உலகில்நெடும்புகழ் பெற்று வாழந்தவரையே தேவர் உலகம் பேணும்‌.

Kalaignar

இனிவரும் புதிய உலகம்கூட இன்றைய உலகில் தன்னலம் துறந்து புகழ் ஈட்டிய பெருமக்களை விடுத்து, அறிவாற்றல் உடையவரை மட்டும் போற்றிக் கொண்டிராது