Chapter 24

புகழ்

Pukazh

Renown

10 kurals

Kural 231 ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.
They gather fame who freely give The greatest gain for all that live
Kural 232 உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ்.
The glory of the alms-giver Is praised aloud as popular
Kural 233 ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன் றில்.
Nothing else lasts on earth for e'er Saving high fame of the giver!
Kural 234 நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு.
From hailing gods heavens will cease To hail the men of lasting praise
Kural 235 நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது.
Fame in fall and life in death Are rare but for the soulful worth
Kural 236 தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.
Be born with fame if birth you want If not of birth you must not vaunt
Kural 237 புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்?
Why grieve at those who blame the shame Of those who cannot live in fame?
Kural 238 வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின்.
To men on earth it is a shame Not to beget the child of fame
Kural 239 வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்.
The land will shrink in yield if men O'erburden it without renown
Kural 240 வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்.
They live who live without blemish The blameful ones do not flurish