Kural 237

Thiru Kural 237

Chapter 24: புகழ்

புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை

இகழ்வாரை நோவது எவன்?

Pukazhpata Vaazhaadhaar Thannovaar Thammai

Ikazhvaarai Novadhu Evan?

English Translation

Why grieve at those who blame the shame Of those who cannot live in fame?

Couplet

If you your days will spend devoid of goodly fame,When men despise, why blame them? You've yourself to blame

Explanation

Why do those who cannot live with praise, grieve those who despise them, instead of grieving themselves for their own inability

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

தமக்குப் புகழ் உண்டாகுமாறு வாழமுடியாதவர் தம்மைத் தாம் நொந்து கொள்ளாமல் தம்மை இகழ்கின்றவரை நொந்து கொள்ளக் காரணம் என்ன?

Solomon Pappaiah

புகழ் பெருகுமாறு வாழமுடியாதவர் அதற்குக் காரணர் தாமே என்று தம்மீது வருந்தாமல், தம்மை இகழ்வார் மீது வருத்தம் கொள்வது எதற்காக?

Kalaignar

உண்மையான புகழுடன் வாழ முடியாதவர்கள், அதற்காகத் தம்மை நொந்து கொள்ள வேண்டுமே தவிரத் தமது செயல்களை இகழ்ந்து பேசுகிறவர்களை நொந்து கொள்வது எதற்காக?