வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்
தான்அறி குற்றப் படின்.
Vaanuyar Thotram Evanseyyum Thannenjam
Thaanari Kutrap Patin
English Translation
Of what avail are sky-high shows When guild the conscience gnaws and knows
Couplet
What gain, though virtue's semblance high as heaven his fame exalt,If heart dies down through sense of self-detected fault
Explanation
What avails an appearance (of sanctity) high as heaven, if his mind suffers (the indulgence) of conscious sin
Tamil Commentary
Interpretations
Mu. Varadarajan
தன் மனம் தான் அறிந்த குற்றத்தில் தங்குமானால் வானத்தைப் போல் உயர்ந்துள்ள தவக்கோலம் ஒருவனுக்கு என்ன பயன் செய்யும்.
Solomon Pappaiah
தன் மீது தன் நெஞ்சமே குற்றம் சொல்லுமானால் மேலான நிலையினால் வரும் பலன்தான் என்ன?
Kalaignar
தன் மனத்திற்குக் குற்றம் என்று தெரிந்தும்கூட அதைச் செய்பவர், துறவுக்கோலம் பூண்டிருப்பதால் எந்தப் பயனும் இல்லை