Kural 282

Thiru Kural 282

Chapter 29: கள்ளாமை

உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்

கள்ளத்தால் கள்வேம் எனல்.

Ullaththaal Ullalum Theedhe Piranporulaik

Kallaththaal Kalvem Enal

English Translation

"We will by fraud win other's wealth" Even this thought is sin and stealth

Couplet

'Tis sin if in the mind man but thought conceive;'By fraud I will my neighbour of his wealth bereave.'

Explanation

Even the thought (of sin) is sin; think not then of crafiily stealing the property of another

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

குற்றமானதை உள்ளத்தால் எண்ணுவதும் குற்றமே, அதானால் பிறன் பொருளை அவன் அறியாதப் வகையால் வஞ்சித்துக்கொள்வோம் என்று எண்ணாதிருக்க வேண்டும்.

Solomon Pappaiah

அடுத்தவர் பொருளை அவருக்குத் தெரியாமல் திருடுவோம் என்று மனத்தால் நினைப்பதும் தீமையானது.

Kalaignar

பிறருக்குரிய பொருளைச் சூழ்ச்சியினால் கவர்ந்து கொள்ளலாமா என்று ஒருவன் நினைப்பதேகூடக் குற்றமாகும்