Kural 285

Thiru Kural 285

Chapter 29: கள்ளாமை

அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்

பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.

Arulkarudhi Anputaiya Raadhal Porulkarudhip

Pochchaappup Paarppaarkan Il

English Translation

Love and Grace are not their worth Who watch to waylay dozer's wealth

Couplet

'Grace' is not in their thoughts, nor know they kind affection's power,Who neighbour's goods desire, and watch for his unguarded hour

Explanation

The study of kindness and the exercise of benevolence is not with those who watch for another's forgetfulness, though desire of his property

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

அருளைப் பெரிதாகக்கருதி அன்பு உடையவராய் நடத்தல், பிறருடைய பொருளைக்கவர எண்ணி அவர் சோர்ந்திருக்கும் நிலையைப் பார்ப்பவரிடத்தில் இல்லை.

Solomon Pappaiah

அடுத்தவர் பொருளைத் திருட எண்ணி, அவர் தளரும் நேரத்தை எதிர்பார்த்து இருப்போர், அருள் மீது பற்று உள்ளவராய் வாழ முடியாது.

Kalaignar

மறந்திருக்கும் நேரம் பார்த்துப் பிறர் பொருளைக் களவாட எண்ணுபவரிடத்தில், அருள் கருதி அன்பாக நடக்கும் பண்பு இருக்காது