Kural 324

Thiru Kural 324

Chapter 33: கொல்லாமை

நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

கொல்லாமை சூழும் நெறி.

Nallaaru Enappatuvadhu Yaadhenin Yaadhondrum

Kollaamai Soozhum Neri

English Translation

What way is good? That we can say The way away from heat to slay

Couplet

You ask, What is the good and perfect way?'Tis path of him who studies nought to slay

Explanation

Good path is that which considers how it may avoid killing any creature

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

நல்ல வழி என்று அறநூல்களால் சொல்லப்படுவது எது என்றால், எந்த உயிரையும் கொல்லாத அறத்தைப் போற்றும் நெறியாகும்.

Solomon Pappaiah

நல்ல வழி எது என்றால், எந்த உயிரையும் கொலை செய்யாமல் அறம் காக்கும் வழிதான்.

Kalaignar

எந்த உயிரையும் கொல்லக் கூடாது எனும் நெறி காப்பதுதான் நல்லற வழி எனப்படும்