Chapter 33

கொல்லாமை

Kollaamai

Not killing

10 kurals

Kural 321 அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்.
What is Virtue? 'Tis not to kill For killing causes every ill
Kural 322 பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.
Share the food and serve all lives This is the law of all the laws
Kural 323 ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.
Not to kill is unique good The next, not to utter falsehood
Kural 324 நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி.
What way is good? That we can say The way away from heat to slay
Kural 325 நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை.
Of saints who renounce birth-fearing The head is he who dreads killing
Kural 326 கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணுங் கூற்று.
Life-eating-Death shall spare the breath Of him who no life puts to death
Kural 327 தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை.
Kill not life that others cherish Even when your life must perish
Kural 328 நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கங் கடை.
The gain of slaughter is a vice Though deemed good in sacrifice
Kural 329 கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து.
Those who live by slaying are Eaters of carrion bizarre!
Kural 330 உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்.
The loathsome poor sickly and sore Are killers stained by blood before