Kural 328

Thiru Kural 328

Chapter 33: கொல்லாமை

நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்

கொன்றாகும் ஆக்கங் கடை.

Nandraakum Aakkam Peridheninum Saandrorkkuk

Kondraakum Aakkang Katai

English Translation

The gain of slaughter is a vice Though deemed good in sacrifice

Couplet

Though great the gain of good should seem, the wiseWill any gain by staughter won despise

Explanation

The advantage which might flow from destroying life in sacrifice, is dishonourable to the wise (who renounced the world), even although it should be said to be productive of great good

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

கொலையால் நன்மையாக விளையும் ஆக்கம் பெரிதாக இருந்தாலும், சான்றோர்க்குக் கொலையால் வரும் ஆக்கம் மிக இழிவானதாகும்.

Solomon Pappaiah

வேள்விகளில் கொலை செய்வதால் நன்மை வரும், செல்வம் பெருகும் என்றாலும், பிற உயிரைக் கொல்வதால் வரும் செல்வத்தைச் சான்றோர் இழிவானதாகவே எண்ணுவர்.

Kalaignar

பெரிதாக நன்மை தரக்கூடிய அளவுக்கு ஒரு கொலை பயன்படக் கூடுமெனினும், நல்ல பண்புடைய மக்கள், அந்த நன்மையை இழிவானதாகவே கருதுவார்கள்