Kural 364

Thiru Kural 364

Chapter 37: அவா அறுத்தல்

தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது

வாஅய்மை வேண்ட வரும்.

Thoouymai Enpadhu Avaavinmai Matradhu

Vaaaimai Venta Varum

English Translation

To nothing crave is purity That is the fruit of verity

Couplet

Desire's decease as purity men know;That, too, from yearning search for truth will grow

Explanation

Purity (of mind) consists in freedom from desire; and that (freedom from desire) is the fruit of the love of truth

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

தூயநிலை என்றுக் கூறப்படுவது அவா இல்லா திருத்தலே யாகும், அவா அற்ற அத்தன்மை மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்.

Solomon Pappaiah

மனத்தூய்மை என்பது ஆசை இல்லாமல் இருப்பதே; ஆசை இல்லாமல் இருப்பதோ மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்‌.

Kalaignar

தூய்மை என்பது பேராசையற்ற தன்மையாகும் அத்தூய்மை வாய்மையை நாடுவோர்க்கே வாய்க்கும்