Kural 377

Thiru Kural 377

Chapter 38: ஊழ்

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி

தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.

Vakuththaan Vakuththa Vakaiyallaal Koti

Thokuththaarkku Thuyththal Aridhu

English Translation

Who crores amass enjoy but what The Dispenser's decrees allot

Couplet

Save as the 'sharer' shares to each in due degree,To those who millions store enjoyment scarce can be

Explanation

Even those who gather together millions will only enjoy them, as it has been determined by the disposer (of all things)

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

ஊழ் ஏற்ப்படுத்திய வகையால் அல்லாமல் முயன்று கோடிக்கணக்கானப் பொருளைச் சேர்த்தவருக்கும் அவற்றை நுகர முடியாது.

Solomon Pappaiah

கோடிப்பொருள் சேர்ந்திருந்தாலும் , இறைவன் விதித்த விதிப்படிதான் நாம் அதை அனுபவிக்க முடியுமே தவிர, நம் விருப்பப்படி அனுபவிப்பது கடினம்.

Kalaignar

வகுத்து முறைப்படுத்திய வாழ்க்கை நெறியை ஒட்டி நடக்கா விட்டால் கோடிப் பொருள் குவித்தாலும், அதன் பயனை அனுபவிப்பது என்பது அரிதேயாகும்